வில்லிவாக்கம் தான்தோன்றியம்மன் கோயில் இரண்டாவது தெருவில் குடிநீருக்காகப் பதிக்கப்பட்ட குழாய் நீண்ட காலமாகிவிட்டதால் துருப்பிடித்து கழிவு நீர் கலந்து வந்தது. இதையடுத்து புதிய குழாய் பதிக்கப்பட்டது. அதிலும் கழிவு நீர் கலந்து வந்தது. இப்போது தண்ணீர் வருவதே இல்லை. குடிநீருக்குக் கட்டணம் மட்டும் தவறாமல் பெறப்படுகிறது. இத்தெருவில் மட்டும் தண்ணீர் வருவதேயில்லை. குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.த.கதிர்வேலு, வில்லிவாக்கம்.