சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் பல்லாவரம் பகுதியும் ஒன்று. இங்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மழைக் காலங்களில் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதியும் கூட. சிறு தூறல்களுக்கே பல்லாவரத்தில் ஆங்காங்கு குட்டைகள் தோன்றிவிடும். காரணம், பல்லாவரத்தில் உள்ள பல ஏரிகள், நீர்வரத்துக் கால்வாய்கள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான். ஆனால், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் முறையாக வந்து சேர மாவட்ட நிர்வாகமோ, பல்லாவரம் நகராட்சியோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.சந்தானம், குரோம்பேட்டை.