திருவொற்றியூர் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கவுன்ட்டர் மட்டுமே இயங்குகிறது. அதனால், பணம் செலுத்துவது, பணமெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தாமதமாகி வருகின்றன. மேலும், மணியார்டர் பாரத்தில் பணம் அனுப்புபவர், செலுத்துபவர் என இருவரின் விலாசமும் அலைபேசி எண்களும் கேட்கப்படுகின்றன. மணி ஆர்டர் மூலமாக பணம் சென்று சேர்ந்தவுடன் அனுப்பியவருக்கு குறுந்தகவல் மூலமாக தகவல் தெரிவிக்கலாமே? இதுபோன்ற நடவடிக்கைகளை தபால் துறை எடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.