ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையத்தில் புகைப்படம் மற்றும் திருத்தம் செய்யச் செல்வோர் அலைக்கழிக்கப்படுகின்றனர். தகவல்களைப் பெறக் கூட வரிசையில் நிற்குமாறு சொல்லும் மைய ஊழியர்கள், சில மணி நேரம் காத்திருக்க வைக்கின்றனர். ஒவ்வொரு திருத்தத்துக்கும் பணம் பெறப்படுகிறது. இதனால், முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கூடுதல் பணியாளர்களை நியமித்து, சரியான தகவல்களை கூற வழிகாட்டும் ஊழியரை நியமிக்க வேண்டும்.
எஸ்.வைத்தியநாதன், ஆவடி.