திருமுல்லைவாயலில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை உடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.எம்.டி.எச். சாலை இப்பகுதி உள்ளதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பலர் விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆகவே ஆவடி நகராட்சி துரிதமாகச் செயல்பட்டு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுகிறோம்.
சம்பத், திருமுல்லைவாயல்.