மணவாள நகர், கபிலர் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக, மேல்நிலை குடிநீர் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. வீட்டுக் கிணறுகளும் வறண்டு போய் விட்டதால், குடிநீருக்காக நாள்தோறும் அலைந்து தேடி வருவது வேதனையாகும். எனவே, துரிதகதியில் கபிலர் நகர் மையப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு புதிதாக அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
- என்.பி.எஸ்.மணியன், மணவாளநகர்.