சென்னை பெருமாநகராட்சி 8}ஆவது மண்டலத்தில் 94- முதல் 108 வரை உள்ள 15 வார்டுகளில் தெரு விளக்குகள் எரிந்து பல மாதங்களாகின்றன.
பெருமாநகராட்சியின் புகார் பிரிவில் பலமுறை பதிவு செய்தும் பலனில்லை. அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் பல விபத்துகள் ஏற்படுகின்றன. பாலியல் தொந்தரவுகளும், நகைகளைத் திருடுவதும் தொடர்கதையாகி வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி ஆணையர் இப்பகுதியை ஆய்வு செய்து பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.