மடிப்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றிவிட்டு சுற்றுச்சுவர் எழுப்பினால் பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம் ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தினால் மழைநீர் தங்குதடையின்றி ஏரிக்கு வர வசதியாக இருக்கும். ஏரிக்கரையைச் சுற்றி நிழல்தரும் மரங்களை நட்டால் முதியவர்கள் இளைப்பாறுவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.
- எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.