தெருக்களை சீரமைக்க வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி 7- ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வடக்கு கொரட்டூர் பகுதியில் தெருக்கள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளன.


சென்னை மாநகராட்சி 7- ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வடக்கு கொரட்டூர் பகுதியில் தெருக்கள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. ஏற்கெனவே இயக்கப்பட்ட சிற்றுந்தும் நிறுத்தப்பட்டு விட்டதால் ஆட்டோ கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தெருக்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதற்கான பணி நடைபெற வில்லை. வீட்டு வரி கட்டவில்லையென்றால் ஜப்தி செய்யப்படும் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில்லை. இனியாவது இப்பிரச்னைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுப்பிரமணி, வடக்கு கொரட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com