சென்னை அம்பத்தூர், புதூர், பானுநகர், எஸ்.வீ.நகர், ஒரகடம், ஆயிரம் காத்த அம்மன் நகர், விஜயலட்சுமிபுரம், கள்ளிக்குப்பம் போன்ற பகுதிகளில் நாள்தோறும் இரவு பகல் என அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் இரவில் கைக்குழந்தைகள், முதியோர்கள் சிரமப்படுகிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலை 6 மணிக்கெல்லாம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து மின்துறை அலுவலகத்தில் கேட்டால் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் மின் தடை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே புதிய மின்மாற்றியை அமைக்க உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- எஸ்.கனகராஜ், அம்பத்தூர்.