நடவடிக்கை தேவை!

குடியரசு தினவிழாவன்று குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து செய்தித்தாள் விநியோகிக்கும் சிறுவன் இறந்தான்.

குடியரசு தினவிழாவன்று குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து செய்தித்தாள் விநியோகிக்கும் சிறுவன் இறந்தான். குழி தோண்டப்பட்டு பல நாட்கள் கழித்துப் பணிகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. குரோம்பேட்டையில் சென்னை குடிநீர் வாரியம், கேபிள் நிறுவனங்கள், மின்வாரியம் ஆகியவை சாலையை அடிக்கடி தோண்டி வருகின்றன. ஆனால் தோண்டிய குழிகளை மூடி சமன்படுத்துவதில்லை. யார் தோண்டுகிறார்கள் என்ற தகவல் பலகை வைப்பதில்லை. இதனால் விபத்துகளில் உயிர் பலி ஏற்படுகிறது. எனவே, அறிவிப்புப் பலகை வைத்து எச்சரிக்கையும் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com