மணவாளநகர் திருப்பெரும் புதூர் நெடுஞ்சாலை பல்லாண்டுகளாக விரிவுபடுத்தப்படாமலும் தரம் உயர்த்தப்படாமலும் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் காலையும், மாலையும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், டெம்போக்கள், இருசக்கரவாகனங்கள் சென்று வருவதால் பொதுமக்கள் சாலையைக் கடக்கவோ, பயணிக்கவோ இயலவில்லை. பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே உடனடியாக நெடுஞ்சாலையைத் தரம் உயர்த்தி விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என்.பி.எஸ்.மணியன், மணவாளநகர்.