ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம், சி44, 2-ஆவது அவென்யூ மற்றும் 12-ஆவது பிரதான சாலை, திருமங்கலத்தில் பாதசாரிகள் நடந்து

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம், சி44, 2-ஆவது அவென்யூ மற்றும் 12-ஆவது பிரதான சாலை, திருமங்கலத்தில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத வகையில் நடைபாதையின் இருபகுதி வாயில்களை ஆக்கிரமித்து சிற்றுண்டிக் கடை செயல்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
 பெருமாநகராட்சி புகார் பிரிவிலும், 8-ஆவது மண்டல அதிகாரி 99-ஆவது வார்டு செயற்பொறியாளர் அவர்களிடமும் நேரில் வழங்கியும் இது நாள் வரை நடவடிக்கையில்லை. ஆகவே பெருமாநகராட்சி ஆணையர் நேரில் இப்பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 நித்திலா செல்வராஜ்,
 வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com