சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம், சி44, 2-ஆவது அவென்யூ மற்றும் 12-ஆவது பிரதான சாலை, திருமங்கலத்தில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத வகையில் நடைபாதையின் இருபகுதி வாயில்களை ஆக்கிரமித்து சிற்றுண்டிக் கடை செயல்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
பெருமாநகராட்சி புகார் பிரிவிலும், 8-ஆவது மண்டல அதிகாரி 99-ஆவது வார்டு செயற்பொறியாளர் அவர்களிடமும் நேரில் வழங்கியும் இது நாள் வரை நடவடிக்கையில்லை. ஆகவே பெருமாநகராட்சி ஆணையர் நேரில் இப்பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ்,
வில்லிவாக்கம்.