சென்னை எம்.எம்.டி.ஏ. பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள 105-ஆவது வட்டத்தில் இயங்கும் கிளை நூல் நிலையம் காலை 8 மணி முதல் 11.30மணி வரை, மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலையில் காலதாமதமாக திறந்து மூடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நூல் நிலையம் அருகில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. காலையில் காலதாமதமாகத் திறப்பதால் நூலகத்தால் பயனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.