ஆவடி ரயில் நிலையத்தில் அரகக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.50 ,திருவள்ளூரில் இருந்து காலை 8.15, 7.25, வேலூரில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விரைவு மின்சார ரயில்கள் ஆவடியில் நிற்பதில்லை. சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு செல்லும் காலை 5.30, மாலை 5.45, இரவு 7.30, 8.10 திருப்பதிக்கு காலை 7.50, இரவு 7.10 வேலூருக்கு மாலை 6.00 மணிக்கு செல்லும் விரைவு மின்சார ரயில்கள் ஆவடியில் நிற்காது. இந்த ரயில்கள் ஆவடியில் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வெங்கடாசலபதி, திருமுல்லைவாயில்.