பெருமாநகராட்சி 108-ஆவது வட்டம், ஈசாக் கார்டன் பகுதி, எம்.எம்.டி.ஏ. பகுதிகளில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் தெரு, லட்சுமி அம்மாள் தெரு போன்று எண்ணற்ற தெருக்களில் தெரு விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன. இது தொடர்பாக பெருமாநகராட்சியின் புகார் பிரிவில் பல முறை புகாரைப் பதிவு செய்தாலும் பலனில்லை. 1913-இல் புகார் பிரிவுக்குத் தொடர்பு கொண்டால் ஊழியர்கள் தேவையற்ற பேச்சு பேசி இணைப்பைத் துண்டிக்கின்றனர். இதன் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.