ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள காமராஜர் நகர், ஐயப்பா நகர், பெரியார் நகர், ஆனந்தா நகர், வி.ஜி.என்.நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல உள்ளன.
இப்பகுதிகளை ஆவடியுடன் இணைக்கும் காமராஜர் நகர் பிரதான சாலை பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
-கே.கனகவேல், ஆவடி.