சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (இ.சி.ஆர்) பகுதி குடியிருப்புவாசிகள் பேருந்துகளையே நம்பியுள்ளனர். ஆனால் இந்தப் பகுதிக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இ.சி.ஆர். - பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.) வழித்தடத்தில் புதிய பேருந்துகளை இயக்கினால் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மாநகரப் போக்குவரத்துக் கழகம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ். எழில், ஈஞ்சம்பாக்கம்.