சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 4- ஆவது வட்டம் சேலவாயல் பகுதியில் உள்ள புல் பண்ணை அருகில் உள்ள வழுதலை மேடு சாலையில் உள்ள தெரு விளக்குகள் எண் 198 முதல் 203 வரை தொடர்ந்து பல வாரங்களாக எரிவதில்லை. மற்றும் 201, 203, 204 எண் தெரு விளக்கு கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதனை சரி செய்தும் மற்ற விளக்குகள் எரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.