அம்பத்தூர் ஓ.டி.யிலிருந்து மதுரவாயல் வரை எஸ் 75 என்ற எண் கொண்ட சிற்றுந்து இயங்கியது.
இந்த சிற்றுந்தை போக்குவரத்துக் கழகம் அண்மையில் திடீரென நிறுத்தியது. இதனால், அம்பத்தூர், மேனாம்பேடு, கருக்கு, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பணிக்குச் செல்லுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வசந்த் ஜி பவார், அம்பத்தூர்.