சென்னை கே.கே. நகர் 10}ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 61}ஆவது தெருவில் காலி மைதானம் உள்ளது. இதைச் சுற்றி அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இம்மைதானத்தில் ஒளி வெள்ளத்தில் சிலர் கிரிக்கெட் போட்டி நடத்துகின்றனர். இரவு முழுவதும் ஒலி பெருக்கியில் வர்ணனையும் நடக்கிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்கள் தூக்கமின்றிப் பாதிக்கப்படுகின்றனர். கிரிக்கெட் விளையாடாத இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இம்மைதானம் செயல்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.முனுசசுவாமி, கே.கே. நகர்.