சென்னை அடையாறு இந்திரா நகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு கழிப்பறை வசதியில்லாததால் பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியவர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கழிப்பறை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி. இராஜகுரு, திருவான்மியூர்.