திருவொற்றியூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் கவுண்டர்பாளையம் முதல் பட்டமந்திரி கூட்டுச்சாலை வரை பிரதான சாலையில் இரண்டு பக்கமும் 5 அடி வரை மண் தேங்கிஉள்ளது. வாகனங்கள் போய் வரும்போது மண் காற்றில் பறக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படவாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சி.விஸ்வநாதன், நேதாஜி நகர்.