பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?

ஆவடி பெருநகராட்சியில் உள்ள பட்டாபிராம், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குடியிருப்புவாசிகளிடம் இருந்து பணம் வசூலித்து

ஆவடி பெருநகராட்சியில் உள்ள பட்டாபிராம், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குடியிருப்புவாசிகளிடம் இருந்து பணம் வசூலித்து பல ஆண்டுகளான பிறகும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 

வீடுகளின் கழிவுநீர் தொட்டிகளில் நிரம்பும் கழிவுநீரை அகற்றுவதிலும் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை செலவழித்து, தனியார் லாரிகள் மூலம் அகற்ற வேண்டியுள்ளது. எனவே,  இனியும் தாமதிக்காமல் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com