தங்கசாலை பேசின் பாலம் பகுதியில் அடிக்கடி (குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேலாக) போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர், கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நான்கு வழிகளில் இருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் செல்ல மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்கசாலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளில் ஏறும் பயணிகளை இடைமறித்து ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் ஏறவும், இறங்கவும் சிரமப்படுகின்றனர். இதனைப் போக்குவரத்துக் காவலர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.
- பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.