ஆதரவற்றோர் உதவித்தொகை கிடைக்குமா?

சென்னை பெருநகராட்சி 105,  108-ஆவது வட்டங்களில் அமைந்துள்ள ராணி அண்ணாநகர்,  முத்துமாரி அம்மன் கோயில் தெரு,  ரஸôக் கார்டன் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற விதவை,

சென்னை பெருநகராட்சி 105,  108-ஆவது வட்டங்களில் அமைந்துள்ள ராணி அண்ணாநகர்,  முத்துமாரி அம்மன் கோயில் தெரு,  ரஸôக் கார்டன் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற விதவை,  முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஏழ்மை நிலையிலுள்ள இவர்களுக்கு உதவித் தொகையான ரூ.1,000 வந்தால் வீட்டு செலவுக்காகும். இதுகுறித்து சம்பந்தபட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ, ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வந்த அஞ்சலகம் அல்லது வங்கிக்கோ நேரில் சென்று கேட்டால், கேவலமான வார்த்தைகளில் அர்ச்சிக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வந்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆதரவற்றோர் உதவித்தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com