திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையின் இரு பகுதிகளிலும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியர் வரும்போது போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-லட்சுமிபாய் அம்மாள், அண்ணா நகர் மேற்கு.