ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல பேருந்துகளையே நம்பியுள்ளனர். சமீப காலமாக இப்பகுதியில் சரிவரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. மாதாந்திர பயண அட்டை இருந்தபோதும் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் பேருந்துகளை இயக்க வேண்டும்.
துரைமுருகன், ஈஞ்சம்பாக்கம்.