பகுதி - 428

இந்தப் பாடல் திருவாவினன்குடித் தலத்துக்கானது.

உன்னுடைய இரண்டு பாத கமலங்களையும் சிலகாலமாவது பூஜிக்கும் பேறு பெறவேண்டும் என்று கேட்கும் இந்தப் பாடல் திருவாவினன்குடித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளை உடைய பாடல்; ஒவ்வொரு ஒன்று, மூன்று ஆகிய சீர்களின் முதலெழுத்து நெடில்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து மெல்லொற்று.

தான தந்தன தான தந்தன
         தான தந்தன தான தந்தன
         தான தந்தன தான தந்தன        தனதான

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
         மாதர் கொங்கையி லேமு யங்கிட
         வீணி லுஞ்சில பாத கஞ்செய -   அவமேதான்
      வீறு கொண்டுட னேவ ருந்தியு
         மேயு லைந்தவ மேதி ரிந்துள
         மேக வன்றறி வேக லங்கிட  -  வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
         வாடி நைந்தென தாவி வெம்பியெ
         பூத லந்தனி லேம யங்கிய  -  மதிபோகப்
      போது கங்கையி னீர்சொ ரிந்திரு
         பாத பங்கய மேவ ணங்கியெ
         பூசை யுஞ்சில வேபு ரிந்திட  -  அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
         ராவ ணன்சிர மேய ரிந்தவர்
         சேனை யுஞ்செல மாள வென்றவன்  - மருகோனே
      தேச மெங்கணு மேபு ரந்திடு
         சூர்ம டிந்திட வேலின் வென்றவ
         தேவர் தம்பதி யாள அன்புசெய் - திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
         போக அந்தரி சூலி குண்டலி
      ஆதி யம்பிகை வேத தந்திரி    -   யிடமாகும்
      ஆல முண்டர நாரி றைஞ்சவொர்
         போத கந்தனை யேயு கந்தருள்
         ஆவி னன்குடி மீதி லங்கிய   - பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com