அன்புநிலை கூடுவதைக் கோரும் இப்பாடல் மதுரைக்கானது.
மிகச் சிறிய பாடல். அடிக்கு ஒற்றொழித்து 12 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதற் சீரில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு வல்லொற்றும்; இரண்டாம் சீரில் இரண்டு குறில் ஒரு நெடில் ஒரு குறிலும் அமைந்துள்ளன.
தானத் தனதான
நீதத் துவமாகி
நேமத் துணையாகிப்
பூதத் தயவான
போதைத் தருவாயே
நாதத் தொனியோனே
ஞானக் கடலோனே
கோதற் றமுதானே
கூடற் பெருமாளே.