பல வகையான நோய்களுக்கு ஆளாகி, பொய்மையும் கள்ளத்தனமுமே கொண்ட இந்த உடலைப் போற்றுகின்ற என்னையும் உன் அடியார் திருக்கூட்டத்தோடு சேர்த்தருள வேண்டும் எனக் கோருகிற இப்பாடல் பழநிக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டெழுத்துகளைக் கொண்டவை; நெடிலோடு தொடங்குபவனை ஈற்றெழுத்தாக ஒரு மெல்லொற்றைக் கொண்டவை; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் குற்றெழுத்துகளாக மூன்றெழுத்துகளைக் கொண்டவை; கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்று; மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளைக் கொண்டவை.
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன தனதான
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்க்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவ்வி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே.