இறைவனுடைய திருவடியைச் சேர்ந்து வாழும் வாழ்வைக் கோரும் இப்பாடல் மதுரைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும், கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்றாகவும் அமையப்பெற்றவை.
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த குருநாதா
தானவர்கு லத்தை வாள்கொடுது ணித்த
சால்சதுர்மி குத்த திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடுசி றக்க அருள்வாயே
வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
மாமயில்ந டத்து முருகோனே
தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
சேரமரு வுற்ற திரள்தோளா
தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
வேல்கொடுத ணித்த பெருமாளே.