பகுதி - 748

உன்னுடைய அன்பைத் தாராய்
பகுதி - 748

‘என்றென்றும் உனது தொண்டனாக இருக்கும் வண்ணம் உன்னுடைய அன்பைத் தாராய்’ என்று கோரும் இப்பாடல் வாலிகொண்டபுரத்துக்கானது.  இத்தலம் திருச்சிக்கு வடக்கே சுமார் 65 கிலோமீட்டரில் பெரம்பலூருக்கு அருகே உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.


தான தந்ததன தான தந்ததன 
      தான தந்ததன தான தந்ததன
      தான தந்ததன தான தந்ததன தந்ததான

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
         காக முண்பவுட லேசு மந்துஇது
         ஏல்வதென்றுமத மேமொ ழிந்துமத வும்பல்போலே

ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
         மேவி நம்பியிது போது மென்கசில
         ரேய்த னங்கள் தனி வாகுசிந்தைவச னங்கள்பேசிச்

சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
         வீச மங்கையர்க ளாட வெண்கவரி
         சீற கொம்புகுழ லூத தண்டிகையி லந்தமாகச்

சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
         மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
         சேவை கண்டுனது பாத தொண்டனென அன்புதாராய்

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
         சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
         சூரி யன்புரவி தேர்ந டந்துநடு பங்கினோடச்  

சோதி யந்தபிர மாபு ரந்தரனு
         மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
         சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத     லன்புகூர 

வாது கொண்டவுணர் மாள செங்கையயி
         லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
         மாதர் சிந்தைகளி கூர நின்றுநட னங்கொள்வோனே

வாச கும்பதன மானை வந்துதினை
         காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
         வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர் தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com