‘என் ஆவி மயக்கமடையாமல் காத்தருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோரும் இப்பாடல் பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; தொங்கல் சீர்களான நான்காம், ஆறாம் சீர்களில் இரண்டு குறிலும், இரண்டு நெடிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தானான தானன தந்ததானா
தானான தானன தந்ததானா
வாரிமீ தேயெழு திங்களாலே
மாரவே ளேவிய அம்பினாலே
பாரெலா மேசிய பண்பினாலே
பாவியே னாவிம யங்கலாமோ
சூரனீள் மார்புதொ ளைந்தவேலா
சோதியே தோகைய மர்ந்தகோவே
மூரிமால் யானைம ணந்தமார்பா
மூவர்தே வாதிகள் தம்பிரானே.