‘தமர் அல்லாதாரும் பாடி மகிழுமாறு நான் ஆசுகவி பாடவேண்டும்’ என்று கோரும் இப்பாடலில் அம்பிகையின் பல நாமங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும்; இரண்டு, மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தானான தான தான தானன
தானான தான தான தானன
தானான தான தான தானன தந்ததான
ஆராத காத லாகி மாதர்த
மாபாத சூட மீதி லேவிழி
யாலோல னாய்வி கார மாகியி லஞ்சியாலே
ஆசாப சாசு மூடி மேலிட
ஆசார வீன னாகி யேமிக
ஆபாச னாகி யோடி நாளும ழிந்திடாதே
ஈராறு தோளு மாறு மாமுக
மோடாரு நீப வாச மாலையு
மேறான தோகை நீல வாசியு மன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதக மன்புறாதோ
வாராகி நீள்க பாலி மாலினி
மாமாயி யாயி தேவி யாமளை
வாசாம கோச ராப ராபரை யிங்குளாவி
வாதாடி மோடி காடு காளுமை
மாஞால லீலி யால போசனி
மாகாளி சூலி வாலை யோகினி யம்பவானி
சூராரி மாபு ராரி கோமளை
தூளாய பூதி பூசு நாரணி
சோணாச லாதி லோக நாயகி தந்தவாழ்வே
தோளாலும் வாளி னாலு மாறிடு
தோலாத வான நாடு சூறைகொள்
சூராரி யேவி சாக னேசுரர் தம்பிரானே.