நமது இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவு கூறும் விதமாகவே ஜனவரி-15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
நாடு விடுதலைபெற்ற பின்னர் 1949 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 15ம் நாள், இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக திரு.கே.எம்.கரியப்பா பதவி ஏற்றார். இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் வீரர்களின் செயலை ‘தியாகம்’ என்ற ஒற்றை சொல்லில் அடக்கிவிடமுடியாது. அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இந்த நாளை நாம் அனுசரிக்கலாம்.