சரத்சந்திர சட்டோபாத்யாயா அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் ஆவார். இவர் 15.09.1879 அன்று மேற்கு வங்காள மாநிலம் தேவானந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஊக்லி என்னும் ஊரில் பிறந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை ரவீந்திர நாத்தாகூரின் சீடராகவே கருதினார்.
சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.
இவர் தனது 61-ஆம் வயதில் கொல்கத்தாவில்மரணம் அடைந்தார்.