27.03.1845: எக்ஸ்ரே கதிர்களை கண்டு பிடித்த ராண்ட்ஜென் பிறந்த தினம் இன்று!

ஜெர்மனி நாட்டு வணிகக் குடும்பம் ஒன்றில் 1845 ஆம் ஆண்டு பிறந்தார் ராண்ட்ஜென்.
27.03.1845: எக்ஸ்ரே கதிர்களை கண்டு பிடித்த ராண்ட்ஜென் பிறந்த தினம் இன்று!

ஜெர்மனி நாட்டு வணிகக் குடும்பம் ஒன்றில் 1845 ஆம் ஆண்டு பிறந்தார் ராண்ட்ஜென். பள்ளியில் படிக்கும் போதே இயற்கையின் மீது பற்று கொண்டு , ஒய்வு நேரத்தை தனிமையான கிராமங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த காடுகளிலும் சுற்றித் திரிந்தார்.

இயற்பியலில் பட்டம் பெற வேண்டுமென விருப்பம் கொண்டு பல்கலைக்கழகத்தில் 1865 ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது, எனவே, அங்குள்ள பாலிடெக்னிக்கில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவரை இயந்திரவியல் பிரிவில் சேர்த்துக் கொண்டனர். முயன்று பயின்று பட்டம் பெற்றார்.

பின்னர் ஸுரிச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ (முனைவர்) பட்டம் பெற்றார் ராண்ட்ஜென்!.

அக்காலத்தில், மிக உயர்ந்த மின் அழுத்தத்தை உருவாக்கவல்ல ஒருவகை மின் சுருளின் எல்லைக்குள், சில அபூர்வான வாயுக்களை நிரப்பினால் அவை மின்சாரத்தை உருவாக்கும் அதுதான் ‘காத்தோட் கதிர்’ என அறியப்பட்டிருந்தது. “மின் சுருளுக்கு அளிக்கப்படும் உயர் மின் அழுத்தமானது முழுக்க அடைக்கப்பட்ட காற்றுப் புகாத ஒரு குழாய்க்குள் நிகழும்”எனப் பல அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? என்ற வினா ராண்ட்ஜென் மனதில் ஏற்பட்டது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு நாளைக்குள் நடைபெற்றுவிடுவது இல்லை. கண்டுபிடிப்புகள் நிகழ பல ஆண்டுகள் உழைத்திட வேண்டும் என்பது ராண்ட்ஜென்னின் புதிய கண்டுபிடிப்பிலும் உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக் குழாயைச் சுற்றிலும் கனமான கறுப்பு தடுப்பு கொண்டு மூடி, துளிகூட ஒளிபுகாவண்ணம் செய்து, மின்சுருள் பரிசோதனையை முழு இருட்டான ஓர் அறைக்குள் வைத்து நடத்தினார். அப்பரிசேதனையின் விளைவால் கதிர்களின் பாதையில் நீட்டப்படும் ‘பேரியம் ப்ளேட்டினோஸைனைட்’ பூசப்பட்ட ஒரு சிறுதட்டு தகதகவென மினுமினுப்பதைக் கண்டறிந்தார். பரிசோதனைக் குழாயிலிருந்து சில மீட்டர் துhரம் தள்ளி வைக்கப்பட்டாலும் கூட, அதில் மினுமினுப்பு ஏற்படுவதைக் கண்டார் ராண்ட்ஜென்.

ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பலவிதமான தடிமன்கள் கொண்ட பொருட்களைக் கதிர்வீச்சின் குறுக்கே வைக்கும்போது அவற்றில் விதவிதமான மாறுபட்ட மினுமினுப்புகள் உண்டாவதைக் கவனமாகப் பதிவு செய்தார். இந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக நடந்து வந்த தமது மனைவியை அழைத்து, மனைவியின் கையைக் கதிர்வீச்சுப் பாதையில் புகுத்தி சிறிது நேரம் அப்படியே அசையாமல் நிறுத்தி வைக்கச் செய்தார். அப்போது உருவான பிம்பத்தைப் புகைப்படச் சுருளில் பதிவு செய்து கொண்டார். பின்னர், புகைப்படச் சுருளை படமாக்கிப் பார்த்தார், அதில் அவரது மனைவியின் கை எலும்புகளும், அவர் அணிந்திருந்த மோதிரமும் மட்டும் தெளிவாகப் பதிந்திருந்தன. கைப்பகுதியின் சதைகளனைத்தும் கிரகணம் போலத் தெளிவில்லாமல் தெரிந்தன. இதுதான், முதன்முதலாகப் பதிவாகி அறிவிக்கப்பட்ட ‘ராண்ட்ஜென் பதிவு’ ஆகும்.

‘காத்தோட் கதிர்களின் பாதையில் ஏதேனும் பொருளை வைத்தால், அப்போது ஏற்படும் மோதலின் காரணமாக மேலும் புதுக் கதிர்கள் உருவாகின்றன’ – எனத் தமது கண்டுபிடிப்புக்கான விளக்கத்தை அளித்தார் ராண்ட்ஜென்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com