லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் - உ.வே.சாமிநாதையர்; பக்.178; ரூ.90; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.

News image
Updated On :19 மார்ச் 2017, 6:51 pm

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் - உ.வே.சாமிநாதையர்; பக்.178; ரூ.90; அடையாளம், புத்தாநத்தம்; )04332 - 273444.
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உள்ளன) சேர்த்து "புதியதும் பழையதும்' என்ற பெயரிலும் 1936 ஆம் ஆண்டில் தனித்தனி நூலாக வெளியிட்டார். பின்னர் இரண்டையும் ஒரே பதிப்பாக உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட, அப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போது இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.
உ.வே.சா. தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைய நேர்ந்ததனால் அதிக பயண அனுபவம் கிட்டியிருக்கிறது. பல ஊர்களில் அவர் சந்தித்த மனிதர்கள் கூறிய செய்திகளையும், அவரது ஆசிரியர்களான மீனாட்சிசுந்தரம்பிள்ளை, தியாகராஜ செட்டியார் போன்றோர் கூறிய தகவல்களையும் சுவையான கட்டுரைகளாக ஆக்கியிருக்கிறார். ஒவ்வொரு சம்பவத்துடனும் தொடர்புடைய காலம், சூழல், ஊர்கள், மனிதர்கள் போன்றவற்றைத் துல்லியமாகக் குறித்திருக்கிறார். எல்லா நிகழ்வுகளுமே சுவையானவைதான். குறிப்பாக போடிநாயக்கனூர் ஜமீந்தாரை நாடி வந்த புலவர் தன்னை வறுமைப்புலி துரத்துவதாகக் கூற, ஜமீன்தார் தனது துப்பாக்கியால் புலியைச் சுட்டு அவர் வறுமையைப் போக்கியது, மிதிலைப்பட்டிக் கவிராயர் தனது முன்னோர்களுக்குப் பொருளுதவி செய்த வெங்கணப்ப நாயக்கரின் பெருமைகளை ஒரு வண்டிக்காரனிடம் கூற, அந்த வண்டிக்காரன், தான் அந்த வெங்கணப்ப நாயக்கரின் பரம்பரையில் வந்தவன் என்று கூறிவிட்டு, கொடுத்ததை வாங்குவது போலாகும் என்பதால் வண்டிக்கான கூலியை வாங்காமல் சென்று விடுவது - இப்படி பற்பல அரிய தகவல்கள் உள்ளன.
எழுதி முடித்து எண்பதாண்டுகள் கடந்த பின்பும் இன்னும் இதிலுள்ள ஒரு வார்த்தை கூட பொருத்தமற்றதாகவோ, பொருள் புரியாததாகவோ இல்லாமலிருப்பது வியப்பும் சிறப்புமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.