

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமைந்து கடைசியில் வெற்றியைத் தேடித்தந்துள்ளன. இந்த இரு ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி பெற்றதில் ஓர் ஒற்றுமை உண்டு.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 2 ஆண்டுகள் தடைக்கு பின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்து. அதைத் தொடர்ந்து 203 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சூப்பர் கிங்ஸ் அணி களம் கண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து சூப்பர் கிங்ஸ் அணி 205 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதேபோன்றதொரு பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வென்றது சென்னை. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி த்ரில் வெற்றி கண்டது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியது.
இந்த இரு ஆட்டங்களிலும் கடைசி 4 ஓவர்களில் தான் சிஎஸ்கே அதிக ரன்கள் குவித்து வெற்றியை அடைந்தது. இதில் பெரிய ஆச்சர்யமென்றால் இரு ஆட்டங்களும் ஒரேமாதிரியாக அமைந்ததுதான்.
மும்பைக்கு எதிராக
கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டன.
கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டன.
ஒரு பந்து மீதமிருக்க வெற்றியை அடைந்தது சிஎஸ்கே.
கொல்கத்தாவுக்கு எதிராக
கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டன.
கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டன.
ஒரு பந்து மீதமிருக்க வெற்றியை அடைந்தது சிஎஸ்கே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.