கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்கள்: இந்திய அணியில் மாற்றமில்லை

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடிய அதே இந்திய அணியே, கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் விளையாடும் என அறிவித்துள்ளது பிசிசிஐ.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடிய அதே இந்திய அணியே, கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்களிலும் விளையாடும் என அறிவித்துள்ளது பிசிசிஐ.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் 3 ஆட்டங்களில் விளையாடிய அதே அணியை கடைசி இரு ஆட்டங்களிலும் களமிறக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. சுரேஷ் ரெய்னா இன்னும் முழு உடற்தகுதியை பெறாததால் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-ஆவது ஆட்டம் வரும் 26-ஆம் தேதி ராஞ்சியிலும், 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் வரும் 29-ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகின்றன.
அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பூம்ரா, தவல் குல்கர்ணி, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கேதார் ஜாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com