மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சர்ஃப்ராஸ் அஹமது 46, காலித் லத்ஃதீப் 40, ஷோயிப் மாலிக் 37 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முன்னணி வீரர்கள் சொதப்பினர். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுநீல் நரேன் 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் தன்வீர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சர்ஃப்ராஸ் அஹமது ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டனர்.