வேறெந்த ஐபிஎல்-லிலும் இதுபோல ஏற்பட்டதில்லை. முன்னணி இந்திய வீரர்கள் வீரர்கள் உள்பட பலர் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள்.
அஸ்வின், ராகுல், விஜய் என மூன்று முக்கிய இந்திய வீரர்கள் ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். வெளிநாட்டு வீரர்களில் டி காக், டுமினி, ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், பீட்டர்சன் ஆகிய வீரர்கள் காயம் மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். காயம் காரணமாக கோலி, டிவில்லியர்ஸ், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். பட்டியலில் நாளுக்கு நாள் புதுப்புது வீரர்கள் சேர்கிறார்கள்.
இப்போது முரளி விஜய் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் முரளி விஜய் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பஞ்சாப் அணியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.