சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்

வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்

வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டி, தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் வேலவன் 7-11, 11-5, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் லையீட் புல்லாரை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் தகுதிநிலை வீரராக களமிறங்கிய வேலவன் தனது முதல் சுற்றில் 11-7, 8-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் அகீல் ரெஹ்மானை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து 10-12, 11-9, 7-11, 10-12 என்ற செட் கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷெர்பினியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com