மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்: முர்ரே, வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே,
தோற்ற சோகத்தில் களத்தில் இருந்து வெளியேறும் முர்ரே.
தோற்ற சோகத்தில் களத்தில் இருந்து வெளியேறும் முர்ரே.

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே 6-2, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரோமேஸ் வினோலஸிடம் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களையும் முர்ரேவும், ரேமோஸும் மாறிமாறி கைப்பற்றினர். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் முதல் 4 கேம்களின் முடிவில் முர்ரே 4-0 என முன்னிலை பெற்றார். இதனால் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சரிவிலிருந்து மீண்ட ரேமோஸ் அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி, முர்ரேவை வீழ்த்தினார்.
தோல்வி குறித்துப் பேசிய முர்ரே, '3-ஆவது செட்டில் வெற்றியை நெருங்கிய நிலையில் தோற்றிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.
உலகின் 3-ஆம் நிலை வீரரான வாவ்ரிங்கா தனது 3-ஆவது சுற்றில் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் உருகுவேயின் பாப்லோ கியூவாஸிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com