திருவாரூரில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருவாரூர் மாவட்ட செஸ் சங்கம், சிஏ ஹோண்டா நிறுவனம் சார்பில் நடைபெறும் 45-ஆவது மாநில மகளிர் செஸ் போட்டியை மருத்துவர் செந்தில் தொடங்கி வைத்தார். இப்போட்டி ஏப்.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், முதலிடம் பெறும் நான்கு பேர் ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவர்.