டிஎன்பிஎல்: சூப்பர் கில்லீஸ் சாம்பியன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டிஎன்பிஎல்: சூப்பர் கில்லீஸ் சாம்பியன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ûஸ தோற்கடித்தது. இதன்மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் தூத்துக்குடி அணியிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது சூப்பர் கில்லீஸ்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் ரன் வேகம் குறைந்தது. இதன்பிறகு கெüஷிக் காந்தி 19 பந்துகளில் 24, அபிநவ் முகுந்த் 38 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்களில் ஆட்டமிழக்க, எஸ்.பி. நாதன் 16 ரன்களில் வெளியேறினார். இறுதியில் தூத்துக்குடி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோர், அருண் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
கோபிநாத் அரை சதம்: பின்னர் ஆடிய சூப்பர் கில்லீஸ் அணியில் கோபிநாத்-தலைவன் சற்குணம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது. தலைவன் சற்குணம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த விக்கெட் கீப்பர் எஸ்.கார்த்திக் 16 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அந்தோணி தாஸ் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து கேப்டன் சதீஷ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோபிநாத் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து சதீஷுடன் இணைந்தார் சரவணன். அப்போது சூப்பர் கில்லீஸின் வெற்றிக்கு 4.4 ஓவர்களில் 51 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதிசயராஜ் பந்துவீச்சில் சதீஷ் இரு சிக்ஸர்களை விளாச, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
சூப்பர் கில்லீஸ் வெற்றி: கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, 19-ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அதில் முதல் பந்தில் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைக்க, அடுத்த இரு பந்துகளில் 3 ரன்கள் கிடைத்தன. அடுத்த 3 பந்துகளில் சரவணன் இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாச, சூப்பர் கில்லீஸ் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சதீஷ் 16 பந்துகளில் 23, சரவணன் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சரவணன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தரப்பில் அதிசயராஜ் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த சீசனில் இறுதிச் சுற்றில் மட்டுமே தூத்துக்குடி அணி தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com