அகில இந்திய கூடைப்பந்து: ஆர்.சி.எஃப்., ராணுவ அணிகள் வெற்றி

கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டங்களில் ஆர்.சி.எஃப்., புணே இந்திய ராணுவ அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டங்களில் ஆர்.சி.எஃப்., புணே இந்திய ராணுவ அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்கியது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-ஆவது நாளான திங்கள்கிழமை, முதல் ஆட்டத்தில் கபூர்தலா ஆர்.சி.எஃப். - சென்னை அரைஸ் ஸ்டீல் அணிகள் மோதின.
இதில், 96- 88 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்.சி.எஃப். அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், புணே இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், ராணுவ அணி 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியை வீழ்த்தியது.
3-ஆவது போட்டியில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து சென்னை சுங்கத் துறை அணி மோதியது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82-71 என்ற புள்ளிகள் கணக்கில் சுங்கத் துறை அணியை வீழ்த்தியது.
3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் விஜயா வங்கி - அரைஸ் ஸ்டீல், சென்னை சுங்கத் துறை - கேரள மின்வாரியம், பஞ்சாப் காவல் துறை - ஆர்.சி.எஃப்., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com