துபை ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை சென் யூஃபேவை வீழ்த்தின

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை சென் யூஃபேவை வீழ்த்தினார்.
இந்த ஆட்டம் 58 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில், ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார் சிந்து. முன்னதாக, லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் சிந்து வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com