பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் சாம்பியன்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ் போட்டியில், சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ் போட்டியில், சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார்.
போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ராம்குமார், இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீராம் பாலாஜியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார் ராம்குமார். இதையடுத்து, இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் ராம்குமார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் பிரேம்ஜித் லாலின் நினைவாக இந்தப் போட்டி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com